வயிர்
வயிர் | வயிர் என்ற துளைக்கருவி போர்க்களங்களில் பயன்படுத்தப்படடிருக்க வேண்டும். இது விலங்குகளின் கொம்பினால் செய்யப்படும். பதிற்றுப்பத்தில் ‘‘வயங்கு கதிர் வியிராமொடு வலம்புரி ஆர்ப்ப‘‘ (67) என்று கூறப்பட்டிருப்பதைக் காணின் மரங்களின் வைரப் பகுதியைத் துளைத்துச் செய்யப்பட்டிருக்குமோ என்று கருத இடமுளதுஇ அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருந்ததாகக் குறிஞ்சிப் பாட்டு குறிப்பிடுகிறது. |
---|